
Lord's Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்டருமான ரிஷப் பந்த் காயமடைந்து களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 23 ரன்களைச் சேர்த்த நிலையிலும், மற்றொரு தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 18 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதன் காரணமாக இங்கிலாந்து அணி முதல் செஷனிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்துள்ள ஒல்லி போப் மற்றும் ஜோ ரூட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணியின் துணைக்கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்டருமான ரிஷப் பந்த் விரல் பகுதியில் காயத்தை சந்தித்துள்ளார்.