
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத இந்தியாவும் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முதல் அரை இறுதியில் டாஸ் வென்றால் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அறிவுரை வழங்கி இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “அரையிறுதியில் ரோஹித் சர்மா டாஸ் வென்றால் நிச்சயம் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் இந்தியாவின் பந்துவீச்சு படை சிறப்பாக இருக்கிறது. அவர்களுக்கு முதலில் பந்து வீசுவதோ இல்லை, இரண்டாவது பந்து வீசுவதோ பெரிய காரியமே கிடையாது. இரண்டாவது பந்து வீசும் போது பனிப்பொழிவு கொஞ்சம் இருக்கும். ஆனால் முதலில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அது சாதகமாக இருக்கும்.