Advertisement
Advertisement
Advertisement

டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித்தை விடுவித்து விடலாம் - வீரேந்திர சேவாக்!

இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மாவை விடுவித்து விடலாம் என முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 27, 2022 • 22:14 PM
Rohit Sharma can be relieved as captain from T20s: Virender Sehwag
Rohit Sharma can be relieved as captain from T20s: Virender Sehwag (Image Source: Google)
Advertisement

கடந்த 2021 இறுதியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி தனது பொறுப்பை துறந்த பிறகு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று ஃபார்மெட்டுக்கும் முழுநேர கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். ஆனால் அது முதலே ஓய்வு, காயம் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு சர்வதேச தொடர்களில் இருந்து விலகி இருந்தார் ரோஹித். 

இப்போது இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வகையில் முகாமிட்டிருந்த அவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக, இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மாவை விடுவித்து விடலாம் என முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

Trending


இதுகுறித்து பேசியுள்ள அவர், “இந்திய அணி நிர்வாகம் வேறு ஒரு வீரரை டி20 கேப்டன் பொறுப்பில் நியமிக்க முடிவு செய்யும் எண்ணத்தில் இருந்தால் ரோஹித் சர்மாவை அந்தப் பொறுப்பில் இருந்து விடுவித்து விடலாம் என நான் கருதுகிறேன். ஏனெனில், இது ரோஹித் சர்மாவுக்கு வேலை பளுவை திறம்பட நிர்வகிக்க உதவும். மேலும், மன அளவிலும் அவரது சோர்வை இது நீக்கும். இதனை அவரது வயதை கருத்தில் கொண்டு நான் சொல்கிறேன்.

வேறு ஒரு வீரர் டி20 ஃபார்மெட்டில் கேப்டனாக நியமிக்கப்பட்டால் அது ரோஹித்துக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அணியை புத்துணர்வுடன் வழிநடத்த உதவும் என நான் கருதுகிறேன். அதே நேரத்தில் அணி நிர்வாகம் அனைத்து ஃபார்மெட்டுக்கும் ஒரே கேப்டன் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தால், அதற்கு ரோஹித் மட்டுமே சரியான நபர்” என தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு கிரிக்கெட் ஃபார்மெட்டுக்கு வேறு வேறு கேப்டனை நியமிக்கும் பாணியை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் கடைப்பிடித்து வருகின்றன. அதன் மூலம் அந்த அணி வெற்றியும் பெற்று வருகின்றன. 

அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் சூழலை பொறுத்தவரையில் அனைத்து ஃபார்மெட்டுக்கும் ஒரே கேப்டன் மட்டுமே இருக்க வேண்டும் என வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார் முன்னாள் கேப்டன் கபில்தேவ். கடந்த ஆண்டு கோலி டி20 ஃபார்மெட்டுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து மட்டுமே விலகுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement