
இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் முகாமிட்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதில் டொமினிக்காவில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து தொடரில் முன்னிலை வகிக்கிறது.
நடந்து முடிந்த முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இது நாள் வரையில் இந்திய அணிக்காக அதிக சதங்களும் அதிக ரன்களும் எடுத்த வீரராக ரோஹித் சர்மா இருக்கிறார். இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக பார்ட் ஓவலில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பேசிய ரோஹித் சர்மா, “நீங்கள் எப்போது ஆட்டம் இழந்தாலும் ஏமாற்றம் அடைவீர்கள். நான் கடைசி டெஸ்டில் நன்றாக பேட்டிங் செய்து கொண்டு இருந்ததால் ஆட்டம் இழந்ததால் ஏமாற்றம் அடைந்தேன். களத்தில் நீண்ட நேரமாக எனது கவனம் சிறப்பாக இருந்தது. பெரிய ஸ்கோரை அடிப்பதற்கு ஒரு வாய்ப்பும் இருந்தது. அந்த நேரத்தில் நான் ஆட்டம் இழந்ததற்காக வருத்தப்பட்டேன். ஆனால் நான் இப்போது என்ன மாற்றிக்கொள்ள முடியும் என்று யோசித்து வருகிறேன்.