Advertisement

 மைதான ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும - ரோஹித் சர்மா!

இந்திய அணி சார்பாக நாங்கள் கொழும்பு மைதான ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 12, 2023 • 12:16 PM
 மைதான ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும - ரோஹித் சர்மா!
 மைதான ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும - ரோஹித் சர்மா! (Image Source: Google)
Advertisement

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்று போட்டியானது செப்டம்பர் 10-ஆம் தேதி கொழும்பு நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதன்பின்னர் மீண்டும் மழை நிற்காததால் அன்றைய நாளில் போட்டி கைவிடப்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆட்டம் இழக்காமல் சதம் விளாசி அசத்தி இருந்தனர்.

Trending


பின்னர் 357 ரன்கள் அடித்தால் வெற்றி இன்று இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “நாங்கள் இந்த போட்டியில் மைதானத்திற்குள் நுழைந்து விளையாட நினைத்தோம். ஏனெனில் நிறைய வீரர்களுக்கு போதிய அளவு ஓய்வு கிடைக்கவில்லை. இன்று இந்த போட்டியில் விளையாடியதில் மகிழ்ச்சி. குறிப்பாக நாம் இந்த மைதான ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும்.

ஏனெனில் மைதானம் முழுவதும் இருக்கும் கவரை அகற்றி போட்டிக்கு மைதானத்தை தயார் படுத்துவது என்பது சாதாரண விசயம் கிடையாது. எங்களுடைய அணி சார்பாக நாங்கள் கொழும்பு மைதான ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த போட்டியில் மீண்டும் நாங்கள் பேட்டிங் செய்ய ஆரம்பிக்கும் போதும் மழையின் தாக்கம் இருந்ததால், மைதானத்தின் தன்மையை கணித்து விளையாடுவது சற்று சவாலாக இருக்கும் என்று நினைத்தோம்.

ஆனாலும் கேஎல் ராகுல், விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதனை சமாளித்து மிகச் சிறப்பாக விளையாடினார்கள். அதே போன்று பும்ரா கடந்த 12 முதல் 15 மாதங்களாக சரியான முறையில் பயிற்சி மற்றும் சிகிச்சையை மேற்கொண்டு அணிக்கு திரும்பி உள்ளார். அவரது பந்துவீச்சும் அசத்தலாக இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் என அனைத்துமே பாசிட்டிவாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement