
ஒருநாள் உலககோப்பை தொடர் இந்த வருடம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்தப்படுகிறது. நான்காவது முறையாக இந்த உலகக்கோப்பை இந்தியாவில் நடத்தப்படுவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. ஏனெனில் கடைசியாக 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பின் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது.
இந்நிலையில் 12 வருடங்களுக்கு முன்பு ஏப்ரல் 2ஆம் தேதி கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதை ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். இந்த தருணத்தில் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இந்த வருடம் இந்தியாவில் நடத்தப்படும் உலக கோப்பை குறித்தும் அதற்காக இந்திய அணி எத்தகைய முனைப்புடன் இருக்கிறது என்பது குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து பேசிய அவர், “உலக கோப்பையை சொந்த மண்ணில் விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரருக்கும் இருக்கும் கனவு. அதிலும் கேப்டனாக இருக்கும் எனக்கு கூடுதல் ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. உலகக் கோப்பை எப்போது தொடங்கும் என்று ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். இந்திய வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு, அடுத்த சில மாதங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுக்க உள்ளோம். இந்த ஆண்டு உலகக்கோப்பையை மீண்டும் பெறுவதற்கு மிகச்சிறந்த வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது.