
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியானது நேற்று கொழும்பு நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் இந்திய அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய வங்கதேச அணி இந்திய அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் குவித்தது. வங்கதேச அணி சார்பாக சாஹிப் அல் ஹசன் 80 ரன்களையும், தாஹீத் ஹிரிடோய் 54 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 266 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி வங்கதேச அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.