
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வைட் வாஷ் செய்து தொடரை வென்றது.
இதனைத்தொடர்ந்து இந்திய அணி இம்மாதம் நியூசிலாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிவிளையாடவுள்ளது. அதன்படி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் இந்தியா அணியை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வங்கதேச டெஸ்ட் தொடரில் இடம்பிடித்த வீரர்களே பெரும்பாலும் இத்தொடரிலும் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இத்தொடரில் ஓய்வு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.