Advertisement

ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது மிகப்பெரும் தவறு - ஆகாஷ் சோப்ரா!

சமீபத்திய வருடங்களாகவே அடிக்கடி காயத்தை சந்தித்து வரும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து மும்பை தவறான முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 16, 2023 • 13:35 PM
ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது மிகப்பெரும் தவறு - ஆகாஷ் சோப்ரா!
ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது மிகப்பெரும் தவறு - ஆகாஷ் சோப்ரா! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 2024 சீசன் முதல் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தங்களுடைய கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த பாண்டியாவை சமீபத்தில் டிரேடிங் முறையில் வலுக்கட்டாயமாக வாங்கிய மும்பை வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோஹித் சர்மாவுக்கு பதிலாக தங்கள் அணியை வழி நடத்துமாறு நியமித்துள்ளது.

ஆனால் சச்சின் முதல் பாண்டிங் தலைமையில் கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வந்த மும்பைக்கு 2013இல் கேப்டனாக பெற்ற முதல் வருடத்திலேயே ரோஹித் சர்மா சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்தார். அதன் பின் 2020க்குள் மொத்தமாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த அவர் குறுகிய காலத்திலேயே மும்பையை வெற்றிகரமான ஐபிஎல் அணியாக ஜொலிக்க வைத்தார்.

Trending


இதனால் இன்று இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோஹித் சர்மாவுக்கு தரத்திலும் அனுபவத்திலும் நிகரில்லாத ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது மும்பை ரசிகர்களிடமே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்திய வருடங்களாகவே அடிக்கடி காயத்தை சந்தித்து வரும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து மும்பை தவறான முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்த முடிவு மிகவும் கடினமானது. ஆனால் தற்போது ஹர்திக் பாண்டியா ஃபிட்டாக இருப்பது மிகவும் முக்கியம். ஒருவேளை ஹர்திக் பாண்டியா ஃபிட்டாக இல்லாமல் போனால் அனைத்தும் மும்பை தலையில் விழுந்து விடும். பொதுவாக ஃபிட்டாக இல்லாத வீரரை நீங்கள் கேப்டனாக நியமிப்பது பெரிய முடிவாகும். 

குஜராத் அணியிலிருந்து வெளியேறிய அவர் மும்பை அணியில் துணை கேப்டனாக இருப்பார் என்று நாம் எதிர்பார்த்த நிலையில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் அணியில் முதல் வருடம் கோப்பையை வென்று 2வது வருடம் ஃபைனல் வரை அழைத்துச் சென்ற அவர் நன்றாகவே கேப்டனாக செயல்பட்டார்.இருப்பினும் மும்பை அணியில் ஏதேனும் தவறு நடந்தால் அவர் தன்னுடைய கையை உயர்த்தி தவறை ஒப்புக்கொண்டு சென்று விடுவார்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement