Advertisement
Advertisement
Advertisement

என்னைவிட ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் முன்னிலையில் இருப்பார்கள் - ருதுராஜ் கெய்க்வாட்!

தற்போதைய இளம் இந்திய அணி பேட்ஸ்மேன்களில் வலைப்பயிற்சி செய்யும் போது தங்களுக்குள் யார் அதிக சிக்ஸர்கள் அடிப்பார்கள் என்ற போட்டி வைத்திருப்பதாக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 11, 2023 • 12:00 PM
என்னைவிட ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் முன்னிலையில் இருப்பார்கள் - ருதுராஜ் கெய்க்வாட்!
என்னைவிட ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் முன்னிலையில் இருப்பார்கள் - ருதுராஜ் கெய்க்வாட்! (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிந்து தயாராகும் பயணத்தின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் இந்திய அணி விளையாடுகிறது.

இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி சவாலான தென் ஆபிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டது. இருப்பினும் நேற்று டர்பன் நகரில் நடைபெற்ற முதல் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. 

Trending


இந்நிலையில் தற்போதைய இளம் இந்திய அணி பேட்ஸ்மேன்களில் வலைப்பயிற்சி செய்யும் போது தங்களுக்குள் யார் அதிக சிக்ஸர்கள் அடிப்பார்கள் என்ற போட்டி வைத்திருப்பதாக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். ஆனால் அதில் சற்று மெதுவாக விளையாடக்கூடிய தம்மை விட அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடிய ஜெய்ஸ்வால் மற்றும் ஃபினிஷராக அசத்தும் ரிங்கு சிங் ஆகியோர் முன்னிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரின் போது எங்களின் சில வீரர்களுக்கு மத்தியில் யார் அதிக சிக்ஸர்கள் அடிப்பார்கள் என்ற போட்டி இருந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டி20 போட்டிக்கு முன்பாக நாங்கள் அதிக பயிற்சிகளை செய்யவில்லை. இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக நாங்கள் பயிற்சிகளை எடுத்தோம்.

அந்த பயிற்சியில் நாங்கள் சிக்ஸர்களை அடித்து மகிழ்ந்தோம். கண்டிப்பாக அந்தப் போட்டியில் ரிங்கு சிங் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் மற்ற அனைவரை காட்டிலும் முன்னிலையில் இருந்தார்கள் என்று நான் சொல்வேன்” என கூறினார். முன்னதாக நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் 3ஆவது போட்டியில் 123 ரன்கள் குவித்த ருதுராஜ் டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement