
ENG vs IND, 2nd Test: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தமிழக ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விளையாடவுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி இன்று (ஜூலை 2) பர்மிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளதன் காரணமாக இப்போட்டியிலும் வெற்றிபெறும் உத்வேகத்துடன் களமிறங்கவுள்ளது. அதேசமயம் மறுபக்கம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் இப்போட்டியில் வெற்றி பெற்று காம்பேக் கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி விளையாடவுள்ளது.
இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதையடுத்து இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.