Advertisement

மூன்று வடிவிலான பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் சல்மான் ஆகா நியமனம்?

பாகிஸ்தான் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று அணிகளுக்கும் சல்மான ஆகா கேப்டனாக நியமிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. 

Advertisement
மூன்று வடிவிலான பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் சல்மான் ஆகா நியமனம்?
மூன்று வடிவிலான பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் சல்மான் ஆகா நியமனம்? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 06, 2025 • 01:53 PM

சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி சமீப காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதை அடுத்து, பாகிஸ்தான் தேர்வுகுழுவினர் மூன்று வடிவிலான அணிகளின் கேப்டனாகவும் சல்மான் ஆகாவை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 06, 2025 • 01:53 PM

பாகிஸ்தான் அணியில் கடந்த சில ஆண்டுகளாகவே சீரற்ற தன்மை நிலவி வருகிறது. அணியின் பயிற்சியாளரை மற்றுதல், அணியின் கேப்டன்களை மாற்றுதல், அணியின் தேர்வுகுழுவினரை மற்றுதல் என பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதனால் அந்த அணி அடுத்தடுத்த ஐசிசி தொடரிகளில் பெரிதளவில் சோபிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. குறிப்பாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது. 

இதையடுத்து எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் டி20 அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அணியின் கேப்டனாக சல்மான் அலி ஆகாவும், துணைக்கேப்டனாக ஷதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர்களான பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி போன்ற் முன்னாள் கேப்டன்கள் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

மேலும் சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து டி20 தொடரை இழந்தாலும், வங்கதேசத்துடனான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் அவரது கேப்டன்சியானது தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளரை கவர்ந்துள்ளதாகவும், இதனால் பாகிஸ்தான் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று அணிகளுக்கும் சல்மான ஆகா கேப்டனாக நியமிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. 

ஏனெனில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் ஒருநாள் அணி சமீபத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடர்களில் படுதோல்விகளைச் சந்தித்து. மறுபக்கம் ஷான் மசூத் தலைமையிலான டெஸ்ட் அணியும் விளையாடிய 12 போட்டிகளில் 9 தோல்விகளைச் சந்தித்ததுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் பாகிஸ்தானை கடைசி இடத்திற்கு கொண்டு சேர்த்தது. 

Also Read: LIVE Cricket Score

இதன் காரணமாகவே முகமது ரிஸ்வான் மற்றும் ஷான் மசூத் ஆகியோரின் பொறுப்புகளையும் சல்மான் அலி ஆகாவிடம் கொடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சல்மான் ஆகா தலைமையில் பாகிஸ்தான் அணி முன்னேற்றத்தை சந்திக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement