இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் புற்கள் நிறைந்ததாக இருந்தாலும், இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடாது என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

ENG vs IND Test Series: இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டுக்கு முன்பு, முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நாளை (ஜூலை 10) லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் இருப்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளான. மேலும் இப்போட்டிகான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஜோஷ் டங்கிற்கு பதிலாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் கடந்த 2021ஆம் ஆண்டிற்கு பிறகு ஜோஃப்ரா ஆர்ச்சர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கவுள்ளார். அதேசமயம் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், அணி தேர்வு குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணிகளின் பிளேயிங் லெவனையும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கணித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "இப்போட்டிக்கான இந்த அணியில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் வெளியேறுவார். மேலும் பிட்ச் புற்கள் நிறைந்ததாக இல்லாவிட்டால் நிச்சயமாக இது நடக்கும். ஆனால் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள பிட்ச் சூரியன் உதிக்கும் போது வறண்ட ஆடுகளம் போல் இர்ப்பதை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். அதனால் இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடாது.
அதனால் இப்போட்டிக்கான இந்திய அணியில் ஜஸ்பித் பும்ரா, சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம்பிடிப்பார்கள். இதனால் பிரஷித் கிருஷ்ணா பிளேயிங் லெவானில் இருந்த வெளியேற வேண்டியிருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் இது மட்டுமே மாற்றமாக இருக்கலாம். பர்மிங்காம் டெஸ்டில் சிராஜ் அற்புதமாக பந்து வீசினார், இப்போது அணியில் அவரது இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பிரசித் கிருஷ்ணாவின் எகானமி விகிதம் கவலைக்குரிய விஷயமாக உள்ளது, மேலும் இதுபோன்ற சூழ்நிலையில் அவரை நீக்குவது மிகவும் சரியான தேர்வாக இருக்கும். தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய போனஸ்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தேர்வு செய்த இந்திய அணி: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மான் கில் (கே), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.
Win Big, Make Your Cricket Tales Now