
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள வேளையில் இந்திய அணி எட்டு வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
எனவே அரையிறுதிக்கான வாய்ப்பை தற்போதைய உறுதி செய்துள்ள இந்திய அணி அடுத்ததாக நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் வரும் நவம்பர் 12ஆம் தேதி விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கு அடுத்து அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் என இரண்டு ஆட்டங்கள் மட்டுமே எஞ்சி இருக்கும் வேளையில் இந்திய அணி இந்த உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக முடித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்நிலையில் அதனை தொடர்ந்து இந்திய அணி உலக கோப்பை தொடரை முடித்த கையோடு அடுத்த நான்கு நாட்களிலேயே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதன்படி நவம்பர் 23ஆம் தேதி தொடங்கும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.