
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் விராட் கோலி. பல சாதனைகளை படைத்துள்ள கோலி, சர்வதேச அளவில் அதிக சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் 75 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் 100 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். கோலி இந்த சாதனையை முறியடிப்பாரா என்பது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விராட் கோலி சச்சினின் சாதனையை முறியடிப்பார் என்றும், அவர் 110 சதங்கள் அடிப்பார் என்றும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கணித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “விராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார். கேப்டன் பதவியின் அழுத்தம் அவர் மீது இருந்தது. தற்போது அவர் மனதளவில் சுதந்திரமாக இருக்கிறார். அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.