
இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு சாதனைகளைப் படைத்து உச்சத்தில் இருப்பவர் விராட் கோலி. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில் விராட் கோலி கடந்த செப்டம்பர் மாதம் முன்பு வரை ஃபார்மில் இல்லாமல் தடுமாறி வந்தார். ஆசியக் கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சதம் டி20 உலக கோப்பையில் அபார ஆட்டம் மற்றும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் நான்கு போட்டிகளில் மூன்று சதம் என தன்னுடைய பழைய பார்ம்க்கு விராட் திரும்பியுள்ளார்.
எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி இன்னும் தன்னுடைய பழைய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த 10 இன்னிங்ஸில் ஒரு முறை கூட அவர் 50 ரன்கள் அடிக்கவில்லை. இந்த நிலையில் விராட் கோலி குறித்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ சச்சின் டெண்டுல்கர் தான் உலகத்திலே சிறந்த பேட்ஸ்மேன் என்று நான் நம்புகிறேன்