
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு பெறாத சில இந்திய வீரர்களுக்கு மத்தியில் ஸ்ரேயாஸ் ஐயரும் ஒருவரானார். குறிப்பாக கடந்த தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற கடந்த டி20 தொடரில் துணை கேப்டனாக விளையாடிய அவர் இந்த தொடரில் விளையாடும் 11 பேர் அணியில் கூட இடம் பெறாதது சில முன்னால் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கடந்த வருடம் காயத்தை சந்தித்து வெளியேறிய அவர் அதிலிருந்து குணமடைந்து 2023 உலகக்கோப்பையில் மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் இன்னும் சரவெடியாக விளையாடும் திறமையை வெளிப்படுத்தாததால் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நம்பப்படுகிறது. போதாக்குறைக்கு ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளில் அவுட்டாகும் பலவீனத்தை கொண்டிருப்பதால் அவரை அனைத்து போட்டிகளிலும் தேர்ந்தெடுக்க தேர்வு குழுவும் யோசிக்கின்றனர்.
இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் தேர்வு செய்யப்படாதது நினைத்து வருத்தப்படவில்லை என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். மேலும் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடி அடுத்த நடைபெற உள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவிக்கும் அவர் டி20 கிரிக்கெட்டில் இனிமேல் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அட்டாக் செய்யும் ஆட்டத்தை வெளிப்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.