
இந்திய அணியின் வளர்ந்துவரும் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். இவர், நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின்போது, ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகுப்பகுதியில் வலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவர்களிடம் ஸ்கேன் செய்ய அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் முதல் இன்னிங்சில் அவர் பேட்டிங் செய்யவில்லை.
பின்னர் ஒருநாள் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகிக்கொண்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், உடல்நிலை குறித்து உடனடியாக எதுவும் கூற முடியாது என தெரிவித்தனர். ஒரு வாரம் சிகிச்சைக்குப் பின்பு, மருத்துவர்கள் இன்று ஸ்ரேயாஸ் ஐயர் உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றனர்.
அதில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை என்பதால், குறைந்தபட்சம் 4 முதல் 5 மாதங்கள் அவரால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது முழுமையாக ஓய்வு தேவை என்று குறிப்பிட்டிருந்தனர். ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வரும் ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது ஐபிஎல் தொடர் முழுவதும் இருக்க மாட்டார் மற்றும் அதைத்தொடர்ந்து ஜூன் மாதம் இரண்டாவது வாரம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியிலும் விளையாட மாட்டார்கள் என்று உறுதியாக தெரியவந்துள்ளது.