
சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை ஊக்குவிப்பதற்காக “மாதத்தின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை” என்ற கௌரவ பட்டத்தை ஐசிசி உருவாக்கியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருது கடந்த 12 மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு குறிப்பிட்ட மாதத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 3 வவையான போட்டிகளிலும் மிகச் சிறப்பாக செயல்படும் வீரருக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கிய இந்தியாவின் ஸ்ரேயாஸ் அய்யர், அமீரக நாட்டின் வ்ரிட்யா அரவிந்த் மற்றும் நேபால் நாட்டின் திபேந்தர் சிங் ஆகிய 3 வீரர்கள் இந்த விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்கள்.
இதில் கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கைக்கு எதிரான உள்நாட்டுத் தொடரின் போது ஸ்ரேயாஸ் ஐயரின் அபாரமான ஆட்டம் காரணமாக இந்த விருதைப் பெற்றிருக்கிறார்.