
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மான் கில் அற்புதமான சதத்தை அடித்து வரலாறு படைத்தார்.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் மற்ற டாப் ஆர்டர்கள் சோபிக்க தவறிய நிலையில், ஷுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு 129 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார். இது ஷுப்மன் கில்லில் 8ஆவது ஒருநாள் சதமாகும். இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஷுப்மன் கில் தனது பெயரில் சில சாதனைகளையும் பதிவுசெய்துள்ளார்.
அதன்படி, இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 8 சதங்களை அடித்த வீரர் எனும் ஷிகர் தவானின் சாதனையை ஷுப்மன் கில் தகர்த்துள்ளார். முன்னதாக ஷிகர் தவான் 57 இன்னிங்ஸில் இந்த சாதனையைப் படைத்த நிலையில், தற்போது ஷுப்மன் கில் 51 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.