
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக், அபிஷேக் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, துருவ் ஜுரெல் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் முதலிரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் தூபே ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ரானா, ஜிதேஷ் சர்மா உள்ளிட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை ஹராரேவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும், எந்தெந்த அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நாளைய போட்டிக்கான இந்திய அணியின் தொடக்க வீரராக அபிஷேக் சர்மா களமிறங்குவார் என்று கேப்டன் ஷுப்மன் கில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “முதல் டி20 போட்டியில் என்னுடன் அபிஷேக் சர்மா தொடக்க வீரராக களமிறங்குவார். அதேசமயம் ருதுராஜ் கெய்க்வாட் மூன்றாம் இடத்தில் விளையாடுவார்” என்று தெரிவித்துள்ளார். மேற்கொண்டு பேசிய அவர், “எனது ஐபிஎல் அணிக்கு முதன்முறையாக நான் கேப்டனாக இருந்தபோது, என்னைப் பற்றி நிறைய விஷயங்களையும், தலைமைத்துவக் கண்ணோட்டத்தைப் பற்றி நிறைய விஷயங்களையும் தெரிந்துகொண்டேன். ஒரு கேப்டனாக நீங்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான சவால்கள் மனதளவில் அதிகம் இருப்பதாக நான் உணர்ந்தேன்.