Advertisement

நான்கு கிலோ வரை எடை குறைந்துள்ளேன் - ஷுப்மன் கில்!

சிகிச்சைக்கு பின் இன்னும் ஃபிட்னஸ் சோதனைக்கு செல்லவில்லை என்று தெரிவிக்கும் ஷுப்மன் கில் மருத்துவமனையில் இருந்த சமயங்களில் 4 கிலோ எடை குறைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 03, 2023 • 19:48 PM
நான்கு கிலோ வரை எடை குறைந்துள்ளேன் - ஷுப்மன் கில்!
நான்கு கிலோ வரை எடை குறைந்துள்ளேன் - ஷுப்மன் கில்! (Image Source: Google)
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது. அதன் காரணமாக புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இந்தியா அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றிகளில் வாய்ப்பு கிடைத்த அனைத்து வீரர்களுமே மிகச்சிறப்பாக செயல்பட்டு பங்காற்றி வருகிறார்கள் என்று சொல்லலாம்.

குறிப்பாக பேட்டிங் துறையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் டாப் 5 பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு அசத்தி வருகிறார்கள். சொல்லப்போனால் அவர்களை விட சமீபத்திய போட்டிகளில் அபாரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Trending


இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக காய்ச்சல் வந்ததால் ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாடாத அவர் சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சையை எடுத்துக்கொண்டு மீண்டும் குணமடைந்து விளையாடி வருகிறார். ஆனாலும் இதுவரை வெறும் ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ள அவர் இந்த உலகக் கோப்பையில் எதிர்பார்த்ததை விட சற்று தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சிகிச்சைக்கு பின் இன்னும் ஃபிட்னஸ் சோதனைக்கு செல்லவில்லை என்று தெரிவிக்கும் ஷுப்மன் கில் மருத்துவமனையில் இருந்த சமயங்களில் 4 கிலோ எடை குறைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக 100% ஃபிட்டாக இல்லாமலேயே இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடி வருவதாக அவர் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “குணமடைந்து வந்த பின் இதுவரை நான் ஃபிட்னஸ் சோதனைக்கு செல்லவில்லை. காய்ச்சல் வந்த பின் தசை மற்றும் எடையின் அடிப்படையில் நான் 4 கிலோ குறைந்துள்ளேன். மேலும் விராட் கோலியுடன் விளையாடும் போது கச்சிதமான முறையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே எங்களிடைய நிகழ்ந்த விவாதமாக இருந்தது. இதற்கு முந்தைய போட்டிகளில் நான் அடித்த ஷாட்டுகள் ஃபீல்டர் கைகளில் விழுந்தது. அதனால் இந்த போட்டியில் ஸ்ட்ரைகை மாற்றி விளையாடுவோம் என்ற கண்ணோட்டத்தில் பேட்டிங் செய்தேன்.

மேலும் மும்பை மைதானம் 400 ரன்கள் அடிக்கும் அளவுக்கு மிகவும் எளிதாக இல்லை. அதனால் நாங்கள் 350 ரன்கள் மட்டுமே எடுத்தோம். அதிலும் ஸ்ரேயாஸ் ஐயரின் பங்கு முக்கியமாக இருந்தது. மேலும் எங்களுடைய பவுலர்கள் பந்து வீசிய விதத்திற்கு விக்கெட்டுகள் விழும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக சிராஜ் நெருப்பாக செயல்பட்டார். எங்களுடைய பவுலர்கள் வெற்றியை எளிதாக்கி வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement