Advertisement

இந்திய அணியின் டாப் ஆர்டர் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் சரியாக விளையாடாதது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 28, 2023 • 18:48 PM
Shubman Gill in T20Is - 'Not a fantastic story at this point in time' - Aakash Chopra
Shubman Gill in T20Is - 'Not a fantastic story at this point in time' - Aakash Chopra (Image Source: Google)
Advertisement

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கு வந்துள்ள நியூஸிலாந்து அணிவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. இதையடுத்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் நேற்று நியூசிலாந்து அணி உடன் ஜார்கண்ட் ராஞ்சி மைதானத்தில் மோதிய போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்தப் போட்டிக்கு, 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ள அதிரடி துவக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷாக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் கில்லுக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டது.

Trending


இதுகுறித்து கருத்து கூறிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, கில் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருப்பதாலும் அவருக்கு டி20 போட்டியில் முழுமையான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அதனால் அவருக்கு இன்னும் சில வாய்ப்புகள் தரப்பட வேண்டும் என்றும் அதனால் அவரே விளையாடுவார் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் அவரது பேட்டிங் அணுகுமுறை டி20 கிரிக்கெட் தகுந்த முறையில் இல்லை. மேலும் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான இசான் கிஷானின் பேட்டிங்கும் டி20 கிரிக்கெட்டில் குறிப்பிடும்படி இல்லை.

இதைச் சுட்டிக்காட்டி பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா,  “இது கொஞ்சம் சரி இல்லாத டாப் ஆர்டர் ஆகும். தொடக்கம் சரியாகவே இல்லை. கடைசி 12 டி20 இன்னிங்ஸில் இஷான் கிஷானின் அதிகபட்ச ஸ்கோர் 36. சுப்மன் கில்லுக்கு ஒரு பந்து நின்று வர அவர் கேட்ச் கொடுத்து வெளியேறி விட்டார். இந்திய டி20 கிரிக்கெட்டில் கில் தற்போது ஒரு நல்ல கதையாக இல்லை.

ராகுல் திரிபாதி இப்பொழுதுதான் வந்திருக்கிறார். அவரால் இன்னும் சரியாக கணக்கை ஆரம்பிக்க முடியவில்லை. அவர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து விட்டார். கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் இருக்கும் வரை ஆட்டம் கையில் இருந்தது. சூரியகுமார் ஆட்டம் இழக்கவும் ஹர்திக் பாண்டியாவும் ஆட்டம் இழந்து விட்டார். 

அவர் அதுவரையில் பந்துக்கு பந்துதான் ரன் அடித்து இருந்தார். வாஷிங்டன் சுந்தரின் ஆட்டம் ஒரு கௌரவமான கோரை எட்ட உதவியது. ஆனால் அது அணியின் வெற்றிக்கு போதுமானது அல்ல. இந்தப் போட்டியில் இந்திய அணி மொத்தமாக வெளியேதான் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement