-mdl.jpg)
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிம் 9ஆவது சீசன் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைய நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதன்படி இந்திய அணி விளையாடிய மூன்று லீக் ஆட்டங்களிலும் வெற்றியைப் பதிவுசெய்தது அடுத்த சுற்றை உறுதிசெய்துள்ளன.
இதனையடுத்து இன்று தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் கனடா அணியை எதிர்த்து இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ஃபுளோரிடாவில் நடைபெறவுள்ள இப்போட்டியானது மோசமான வாநிலை காரணமாக தாமதமாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டிக்கு பிறகு நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிஸர்வ் வீரராக சேர்க்கப்பட்டிருந்த ஷுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இன்றைய தினம் வெளியான தகவல் ஒன்றில் ஷுப்மன் கில்லின் ஒழுங்கீனமான நடவடிக்கை காரணமாகவே அவர் இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்திய அணியுடன் அமெரிக்கா சென்றடைந்த ஷுப்மன் கில் பயிற்சி போட்டிகளில் ஈடுபடாமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஷுப்மன் கில் ஹோட்டல் அறையிலேயே அதிக நேரம் செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.