
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் ஜிம்பாப்வே ஒரு வெற்றியும், இந்தியா இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கின்றன. இதனால் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் டி20 தொடரை கைப்பற்றும்.
அதேசமயம் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்றால் தொடர் சமனிலைக்குச் சென்று, அடுத்த போட்டியின் முடிவைப் பொடுத்து தொடரின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படும். இதன் காரணமாக இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் விளையாடிவருகின்றன. இந்நிலையில் இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ரஸா 46 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இந்திய அணி இலக்கை நோக்கி விளையாடிவருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் ஜிம்பாப்வே அணியின் கேப்டனும் நட்சத்திர ஆல் ரவுண்டருமான சிக்கந்தர் ரஸா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.