-mdl.jpg)
நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அனைவரது கவனத்தையும் யஷஸ்வி ஜெய்வால் ஈர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக விசாகப்பட்டினத்தில் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது இரட்டை சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
இந்நிலையில் ராஜ்கோட்டில் நடைபெற்றுவரும் இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இரட்டை சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
இவரது இரட்டை சதத்தின் மூலமாக இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெற 557 ரன்களை இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் இரட்டை சதத்தை பதிவுசெய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், பல்வேறு சதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். அதன்படி, இங்கிலாந்து அணிக்கெதிராக ஒரு தொடரில் இரண்டு முறை இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.