அடுத்த 12 மாதங்களுக்கு வங்கதேச அணியின் ஒருநாள் கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமனம்!
எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முதல் வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 12 மாதங்களுக்கு வங்கதேச அணியின் ஒருநாள் கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமனம்! (Image Source: Google)
வங்கதேச அணி இம்மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதன்மூலம் வங்கதேச அணியானது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு தரப்பு தொடரில் விளையாடவுள்ளது.
மேற்கொண்டு இலங்கை டெஸ்ட் தொடருக்கன வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதேசமயம் வங்கதேச ஒருநாள் மற்றும் டி20 அணிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த 12 மாதங்களுக்கு வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டனாக நட்சத்திர ஆல் ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்படுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
முன்னதாக வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ செயல்பட்டு வந்த நிலையில், நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் அந்த அணியில் செயல்பாடுகள் பெரிதளவில் இல்லை. மேலும் நஜ்முல் ஹொசைனும் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததாக அறிவிப்புகள் வெளியான நிலையில் தான் தற்சமயம் மெஹிதி ஹசன் மிராஸ் வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Also Read: LIVE Cricket Scoreமெஹதி ஹசன் மிராஸ் இதுவரை 105 ஒருநாள் போட்டிகளில் 1617 ரன்களையும் 110 விக்கெட்டுகளையும் குவித்துள்ளார். முகமது ரஃபீக், மஷ்ரஃப் மோர்டாசா மற்றும் ஷகிப் அல் ஹசன் போன்ற ஜாம்பவான்களுடன் சேர்ந்து, ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வங்கதேச வீரர்கள் பட்டியலிலும் ஒரு அங்கமாக உள்ளார். இதையடுத்து எதிவரும் இலங்கை தொடர் முதல் மெஹிதி ஹசன் வங்கதேச அணியின் கேப்டனாக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News