
நியூசிலாந்து மகளிர் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன.
இந்நிலையில் இந்த தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அந்தவகையில் அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் சூஸி பேட்ஸ் 4 ரன்னிலும், லாரன் டௌன் ஒரு ரன்னிலும், கேப்டன் சோஃபி டிவைன் 9 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் இணைந்த ஜார்ஜ் பிளிம்மர் - புரூக் ஹாலிடே இணை சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜார்ஜியா பிளிம்மர் 39 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புரூக் ஹாலிடே தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய மேடி கிரீன் 15 ரன்களுக்கும், இஸபெல்லா கஸ் 25 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட புரூக் ஹாலிடேவும் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 86 ரன்களில் ஆட்டமிழந்தார்.