
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் அதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.
இந்த அணியில் ஆவேஸ் கான் இடம்பெற்றிருந்தார், ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் சதமடித்த தேவ்தத் படிக்கல் இடம் பெறவில்லை. இதனால் படிக்கல் ஏன் இடம் பெறவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் இது குறித்து முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இருபது வயதே ஆன படிக்கல் அற்புதமாக விளையாடி வருகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 450 ரன்கள் குவித்து சென்ற ஆண்டுக்கான சிறந்த எமர்ஜிங் பிளையேர் விருதை அவர் தட்டிச் சென்றார்.