
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததுடன், லீக் சுற்றுடனே தொடரில் இருந்து வெளியேறி ஏமாற்றமளித்தது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி மீதும் அந்த அணி வீரர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகுவதாக அறிவித்தார். இதனால் இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. அதில் ஜோ ரூட், ஹாரு புரூக், பென் டக்கெட், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் அடுத்த கேப்டனுக்கான தேர்வில் உள்ளனர்.
இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் இங்கிலாந்து அணியின் அடுத்த வெள்ளை பந்து கேப்டன் பொறுப்புக்கான போட்டியாளர்கள் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டன் பதவிக்கு இரண்டு விருப்பங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன், மேலும் அந்த விருப்பங்கள் அவர்கள் எடுக்க விரும்பும் திசையைப் பொறுத்தது.