கோப்பையை வென்ற இந்திய அணி; நடனமாடி கொண்டாடிய கவாஸ்கர் - காணொளி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காணொளி வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
அதன்படி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Trending
இதையடுத்து இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடினார். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரரும், நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் செயல்பட்டு வரும் சுனில் கவாஸ்கர் மைதானத்தில் இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை கைகளில் ஏந்திய தருணத்தில் சிறு பிள்ளை போல நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் சுனில் கவாஸ்கர் நடனமாடும் இந்த காணொளியானது இணையத்திலும் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் சுனில் கவாஸ்கர், கடந்த 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கும் உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
mood pic.twitter.com/g61GOL0jpY
— soo washed (@anubhav__tweets) March 9, 2025இப்போட்டி குறித்து பேசினால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் டேரில் மிட்செல் 63 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெ ல் 53 ரன்களையும் சேர்க்க, ரச்சின் ரவீந்திரா 37 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 34 ரன்களையும் சேர்த்தததன் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களைச் சேர்த்தது.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 76 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 34 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now