Advertisement

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரிஷப் பந்தை நியமிக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர் கருத்து

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக ரிஷப் பந்தை நியமிக்க வேண்டுமென முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 16, 2022 • 16:14 PM
Sunil Gavaskar names batter who can replace Virat Kohli as India's new Test captain
Sunil Gavaskar names batter who can replace Virat Kohli as India's new Test captain (Image Source: Google)
Advertisement

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி நேற்று மாலை டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக முறைப்படி அறிவித்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த சில தினங்களில் கோலி இப்படி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அடுத்தடுத்து விராட் கோலி அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்தும் கேப்டன் பதவியைத் துறந்தது குறித்து பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.

Trending


இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யார் செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்படப்போவது யார் என்பது தேர்வுக் குழுவினரை பொறுத்தவரைக்கும் ஒரு விவாதமாக இருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரை இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ரிஷப் பந்தை பார்க்கிறேன்.

ஏனெனில் ரிக்கி பாண்டிங் விலகியபோது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி ரோஹித் சர்மாவிற்கு வழங்கப்பட்டது. அப்போதிலிருந்தே ரோஹித் சர்மாவின் பேட்டிங்கில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் கூட 50, 100, 150, 200 என தனது பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதே போன்று தான் தற்போது ரிஷப் பந்தும் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து இந்த தென் ஆப்பிரிக்க தொடரின் கடைசி போட்டியில் அற்புதமான சதத்தை அடித்தார்.

டெல்லி அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் செயல்பட்டு வரும் பன்ந்த் தனது கடமை மற்றும் அணியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே நிச்சயம் இந்திய டெஸ்ட் அணிக்கும் அவர் கேப்டனாக செயல்படும் பட்சத்தில் அவரது திறனும் அதிகரிக்கும்” என்று தான் நம்புவதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

ஒருபுறம் அனைவரும் ரோஹித் சர்மா தான் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இன்னும் சில ஆண்டுகள் செய்யப்படுவார் என்று கூறிவரும் நிலையில் சுனில் கவாஸ்கர் ரிஷப் பந்தை ஆதரித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement