CT 2025: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த சுரேஷ் ரெய்னா!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கணித்துள்ளார்.

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதற்கேற்றவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் காயம் காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் மாற்று வீரர்களை இந்திய அணி தேர்வு செய்துள்ளதால் அவர்களின் செயல்படுகல் எவ்வாறு இருக்கும் என்றும், இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Trending
இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கணித்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள இந்த பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை டாப் ஆர்டர் வீரர்களாக சேர்த்துள்ளார். அதன்பின் அவர் ரிஷப் பந்தை 5ஆவது இடத்தில் தேர்வு செய்ததுடன் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் தேர்ந்தெடுத்தார்.
இருப்பினும், நல்ல ஃபார்மில் இருக்கும் கேஎல் ராகுலும் ரிஷப்பிற்குப் பதிலாக அணியில் இருக்க முடியும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். இதுதவிர்த்து அவர் தனது அணியில் மூன்று ஆல் ரவுண்டர்களுக்கு வாய்ப்பு வழங்கிய்ள்ளார். அதன்படி அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரதை தேர்வு செய்துள்ளார். மேற்கொண்டு முதன்மை சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவை அவர் லெவனில் சேர்த்துள்ளார்.
இறுதியாக, அவர் இரண்டு இளம் வேகப்பந்து வீச்சாளர்களான ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங்கிற்கு தனது அணியில் இடம் கொடுத்துள்ளார். அதேசமயம் அவர் தனது அணியில் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்காததுடன், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோருக்கும் தனது லெவனில் அவர் வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் ரெய்னா தேர்வு செய்த பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.
Also Read: Funding To Save Test Cricket
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா. ரிஸர்வ் வீரர்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது ஷமி, ஷிவம் தூபே
Win Big, Make Your Cricket Tales Now