
இங்கிலாந்து தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்! (Image Source: Google)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து டி20 தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜனவரி 22 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சிறப்பு சாதனைகளை படைக்க வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.
சர்வதேச டி-20 போட்டிகளில் 150 சிக்ஸர்கள்