Advertisement

இதுதான் நான் ஸ்வீப் ஷாட் விளையாடாத முதல் போட்டி - சூர்யகுமார் யாதவ்!

ஒருநாள் கிரிக்கெட்டில் கொஞ்சம் மெதுவாக விளையாடி நீண்ட நேரம் களத்தில் நின்றால் ரன்களை குவிக்க முடியும் என்பதை தற்போது உணர்ந்துதான் சற்று நேரம் நின்று விளையாடினேன் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan September 23, 2023 • 13:31 PM
இதுதான் நான் ஸ்வீப் ஷாட் விளையாடாத முதல் போட்டி - சூர்யகுமார் யாதவ்!
இதுதான் நான் ஸ்வீப் ஷாட் விளையாடாத முதல் போட்டி - சூர்யகுமார் யாதவ்! (Image Source: Google)
Advertisement

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் கேஎல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே நேற்றைய முதல் போட்டியில் விளையாடியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 276 ரன்களை குவிக்க பின்னர் அதனை வெற்றிகரமாக துரத்திய இந்திய அணியானது 48.1 ஓவர்களில் 281 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சூர்யகுமார் யாதவின் ஆட்டம் அனைவராலும் கவனிக்கப்பட்ட ஒரு இன்னிங்ஸ்ஸாக மாறியது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 வீரராக இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக தடுமாறி வரும் சூரியகுமார் யாதவிற்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து ஆதரவை வழங்கி வந்தது.

Trending


அதனால் அவரது இடம் குறித்த பல்வேறு சர்ச்சைகள் இருந்து வரும் வேளையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் ஆறாவது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளை சந்தித்து ஐந்து பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 50 ரன்கள் குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது அரைசதத்தை பதிவு செய்தார். இருப்பினும் போட்டியை முடித்துக்கொடுக்காமலே வெற்றி அருகில் இருந்த போது அவர் ஆட்டமிழந்தது சற்று ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் இப்போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், “இதுபோன்ற ஒரு இன்னிங்ஸை தான் நான் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே நினைத்து வந்தேன். இந்த போட்டியை இறுதிவரை கொண்டு சென்று முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எதிர்பாரா விதமாக இன்று என்னால் போட்டி முடித்துக் கொடுக்க முடியவில்லை.

இருப்பினும் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. ஒருநாள் கிரிக்கெட்டில் கொஞ்சம் மெதுவாக விளையாடி நீண்ட நேரம் களத்தில் நின்றால் ரன்களை குவிக்க முடியும் என்பதை தற்போது உணர்ந்துதான் சற்று நேரம் நின்று விளையாடினேன். எனக்குத் தெரிந்து இந்த போட்டியில் தான் நான் ஸ்வீப் ஷாட் விளையாடாமல் ஒரு போட்டியில் விளையாடியதாக நினைக்கிறேன். ஏனெனில் போட்டியின் ஆரம்பத்திலேயே அவசரப்படாமல் நின்று விளையாட வேண்டும் என்பதற்காகவே கவனமாக ஆடினேன்.

அதோடு என்னுடைய ஸ்ட்ரெயிட் டிரைவ்களுக்கு காரணம் சந்து பண்டிட் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் தான். அவர்களிடம் எடுத்துக் கொண்ட பயிற்சிதான் என்னுடைய இந்த ஸ்ட்ரெயிட் டிரைவிற்கு காரணம். உண்மையிலேயே இந்த போட்டியில் தொடக்க வீரர்கள் விளையாடியதை பார்க்கும்போது சிறப்பாக இருந்தது. அதேபோன்று நாமும் இறுதிவரை விளையாடி வெற்றி பெற்று கொடுக்க வேண்டும் என்று நினைத்தே விளையாடினேன்“ என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement