Advertisement
Advertisement

T20 WC 2024: உகாண்டா அணிக்கு 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது விண்டீஸ்!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: உகாண்டா அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 09, 2024 • 07:43 AM
T20 WC 2024:  உகாண்டா அணிக்கு 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது விண்டீஸ்!
T20 WC 2024: உகாண்டா அணிக்கு 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது விண்டீஸ்! (Image Source: Google)
Advertisement

விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து உகாண்டா அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இருவரும் தொடக்கம் முதலே அதிரடி காட்டியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் பிரண்டன் கிங் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரனும் 3 சிக்ஸர்களுடன் 22 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த் ஜான்சன் சார்லஸ் மாற்றும் கேப்டன் ரோவ்மன் பாவெல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினர். 

Trending


அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜான்சன் சார்லஸ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து அணியின் கேப்டன் ரோவ்மன் பாவெல் 23 ரன்களுக்கும், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட் 22 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை களத்தில் இருந்த ஆண்ட்ரே ரஸல் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். 

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 173 ரன்களைச் சேர்த்தது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே ரஸல் 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும், ரொமாரியோ ஷெப்ஃபெர்ட் 5 ரன்களையும் சேர்த்தனர். உகாண்டா அணி தரப்பில் கேப்டன் பிரையன் மசாபா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி உகாண்டா அணி விளையாடவுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement
Advertisement