
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 92 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்தாலும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதுடன், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டி முடிந்து அரையிறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெற்றது குறித்து பேசிய ரோஹித் சர்மா, “இந்த வெற்றியானது திருப்தி அளிக்கிறது. எதிரணியின் எதிர்ப்பையும் அவர்கள் கொண்டு வரும் அச்சுறுத்தலையும் நாங்கள் அறிவோம். ஒரு குழுவாக நாங்கள் சிறப்பாகச் செய்தோம், நாங்கள் செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்துகொண்டே இருந்தோம். இந்த வெற்றி ஒரு அணியாக எங்களுக்கு நல்ல நம்பிக்கையை அளிக்கிறது.