டி20 உலகக்கோப்பை 2022: இந்திய அணியில் மேலும் சில வீரர்கள் விலக வாய்ப்பு!
இந்திய அணியில் மேலும் 3 வீரர்களுக்கு காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

T20 World Cup 2022: 3 Indian players who might miss the tournament due to constant injury concerns (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் தான் தற்போது பெரும் குழப்பங்கள் நீடித்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய அணியில் மேலும் 3 வீரர்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதில் முதலில் இருப்பதே கேப்டன் ரோகித் சர்மா தான். 35 வயதாகும் ரோஹித்திற்கு அதிக உடல் எடையால் அடிக்கடி தசைப்பிடிப்பு பிரச்சினை ஏற்படும். சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸுடனான தொடரில் கூட காயத்தினால் இன்னிங்ஸின் பாதியிலேயே வெளியேறினார். அடுத்த போட்டியில் விளையாடவில்லை. எனவே அவருக்கு எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் பிசிசிஐ மருத்துவக்குழு அதிக கண்காணிப்புடன் இருக்கிறார்கள்.
இந்த பட்டியலில் இரண்டாவதாக இருப்பது முதன்மை பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தான். புவனேஷ்வர் குமாருக்கு கடந்த காலங்களில் நிறைய காயங்கள் ஏற்பட்டிருப்பதால், சற்று கூடுதல் போட்டிகளில் விளையாடினால் கூட தசைப்பிடிப்பு, முதுகுவலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால் தான் தென்னாப்பிரிக்க தொடரில் அவருக்கு ஓய்வு கொடுத்துள்ளனர். எனவே அவரின் பனிச்சுமையை சரியாக கையாள வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.
இந்தியாவின் மற்றொரு பிரச்சினை ஹர்ஷல் பட்டேல் தான். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக உள்ள இவர், நீண்ட ஓய்வுக்கு பின் தற்போது தான் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். எனினும் பும்ராவை அவசரப்படுத்தியதை போன்றே ஹர்ஷலையும் பிசிசிஐ அவசரப்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே ஒருவேளை சரியான ஓய்வில்லாமல் ஹர்ஷல் களமிறங்கினால், பழைய காய பாதிப்பு மீண்டும் தொந்தரவு கொடுக்கலாம்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News