
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, இன்றைய போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்டு ஆடிவருகிறது. சிட்னியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 12 பந்தில் 9 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் இணைந்து பொறுப்புடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார். ரோஹித் சர்மா சிக்ஸர்கள் அடித்து ஆடினாலும், அவரது வழக்கமான ஃப்ளோவில் ஆடவில்லை. கோலியும் பொறுமையாகவே ஆடினார். இந்திய அணியின் ஸ்கோர் மந்தமாகவே இருந்தது.
அரைசதம் அடித்த ரோஹித் சர்மா 39 பந்தில் 53 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ரோஹித்தும் கோலியும் இணைந்து 73 ரன்களை சேர்த்தனர். 12 ஓவரில் இந்திய அணியின் ஸ்கோர் 84 ரன்களாக இருந்தபோது ரோஹித் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ் அடித்து ஆட, கோலியும் அடித்து விளையாடினார்.