
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. அடிலெய்டில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் ஏற்கனவே பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும், நெதர்லாந்து அணியை 56 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்திய இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில் தோல்வியைத் தழுவியது.
இந்திய அணியின் இந்த தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பவர் விராட் கோலி தான். ஆசிய கோப்பையில் அவர் ஆடத்தொடங்கிய ருத்ர தாண்டவம் இன்னும் நிற்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக 82, நெதர்லாந்துடன் 62 என இரண்டே இன்னிங்ஸ்களில் 144 ரன்களை அடித்துள்ளார். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அப்போட்டியில் தவறவிட்ட மாபெரும் உலக சாதனையை அவர் இப்போட்டியில் நிறைவு செய்துள்ளார்.