
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும், எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும், எந்தெந்த வீரர்கள் போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற கருத்து கணிப்புகளை முன்னள் வீரர்கள் கணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியானது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து என இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கிரிக்கெட் என்பது ஈடு இணையற்ற ஆற்றல், சிலிர்ப்பூட்டும் தருணங்கள் மற்றும் தீராத ஆர்வத்தை கொண்ட விளையாட்டாகும். நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளது.