
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதற்கேற்றவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக யார் செயல்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏனெனில் அணியில் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் உள்ள நிலையில் இவர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளன. இருப்பினும் நடந்து முடிந்த இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் பிளேயிங் லெவனில் இடம்பிடித்ததால் அவர் தற்போது முன்னிலையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் யார் என்பது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் தனது கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் முதல் விக்கெட் கீப்பர் தேர்வாக கேஎல் ராகுல் இருப்பார். கேஎல் ராகுல் தான் தற்போது எங்கள் அணியின் நம்பர்-1 விக்கெட் கீப்பர், இதைத்தான் நான் இப்போது சொல்ல முடியும்.