
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நாளை (அக்டோபர் 24) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை சமன்செய்யும். அதேசமயம் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் டெஸ்ட் தொடரை கைப்பற்று. இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனனில் முதல் டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்திருந்த ரிஷப் பந்த், ஷுப்மன் கில் ஆகியோர் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு கடந்த போட்டியில் விளையாடிய சர்ஃப்ராஸ் கானும் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார். இதில் கேஎல் ராகுல் மட்டுமே ரன்களைச் சேர்க்க தவறினார்.