Advertisement

வெற்றி பெற்றது எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது - கேஎல் ராகுல்!

கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. வெளிநாட்டில் நாம் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறோம் என கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 05, 2024 • 13:53 PM
வெற்றி பெற்றது எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது - கேஎல் ராகுல்!
வெற்றி பெற்றது எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது - கேஎல் ராகுல்! (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவந்த இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 1-1 என சமன் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன்செய்து அசத்தியுள்ளது. 

தென் ஆப்பிரிக்க தொடர் மற்ற இந்திய வீரர்களை விட கேஎல் ராகுலுக்கு மிகவும் ஸ்பெஷலானதாக இருந்திருக்கும். ஏனென்றால் அவர் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் தொடரை கைப்பற்றினார். இதன் மூலம் விராட் கோலிக்கு பிறகு இந்த சாதனை நிகழ்த்திய இந்திய கேப்டன் என்ற பெருமையை கேஎல் ராகுல் பெற்றார். 

Trending


இதேபோன்று 2021 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த கேஎல் ராகுல், இம்முறையும் சதம் அடித்து அசத்தியிருக்கிறார். இந்த நிலையில் போட்டி முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், “இந்தப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றது எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏனென்றால் நாங்கள் முதல்முறையாக கேப் டவுனில் டெஸ்ட் போட்டியை வென்று இருக்கிறோம். தென் ஆப்பிரிக்க மண்ணில் இது என்னுடைய மூன்றாவது டெஸ்ட் தொடர். நாங்கள் எப்போதெல்லாம் இங்கு வருகிறோமோ, அப்போதெல்லாம் போட்டியிலே நாங்கள் எப்போதுமே இருக்கிறோம்.

இதன் மூலம் நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றிருப்போம். ஆனால் அந்த நிலையில் இருந்து நாங்கள் தோல்வியை தழுவுகிறோம் என்றால் ஏதேனும் ஒரு செஷனில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யாமல் இருந்திருப்போம். இது தான் எங்களுடைய தோல்விக்கு காரணம். இந்த வெற்றி எங்கள் அனைவருக்கும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. இது மிகவும் ஸ்பெஷல் ஆக இருக்கிறது.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் என்ன நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை. நேற்றுதான் டாஸ் வீசினார்கள். அதற்குள் போட்டி முடிவடைந்துவிட்டது. முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த பிறகு இரண்டாவது டெஸ்டில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து திட்டம் தீட்டினோம்.மேலும் ஆடுகளத்தில் எப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணங்களும் மாற்றிக் கொண்டோம். இதனால் முதல் டெஸ்டில் நாங்கள் அப்படி இல்லை என்று சொல்ல முடியாது. இரண்டாவது டெஸ்டில் நாங்கள் எதற்கும் தயாராக இருந்தோம்.

கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. வெளிநாட்டில் நாம் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறோம். இதன் மூலம் நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை எவ்வளவு மகிழ்ச்சியுடன் விளையாடுகிறோம் என்று புரிந்து இருக்கும்என நினைக்கிறேன். எங்கள் நாட்டுக்காக விளையாடுவதை நாங்கள் எவ்வளவு மதிக்கிறோம் என்றும் இந்தியாவுக்கு வெளியே டெஸ்ட் போட்டிகள் வெல்வது எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று இப்போது புரிந்து இருக்கும்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement