Advertisement
Advertisement
Advertisement

ஐசிசிக்கு விநோத கோரிக்கையை வைத்த கிரேம் ஸ்மித்!

டெஸ்ட் போட்டிகளை இனி 6 அணிகள் மட்டுமே விளையாட வேண்டும் என தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் ஐசிசிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 22, 2022 • 11:26 AM
Test cricket might be played by just 5-6 teams: Former SA captain Graeme Smith makes big claim
Test cricket might be played by just 5-6 teams: Former SA captain Graeme Smith makes big claim (Image Source: Google)
Advertisement

டெஸ்ட் கிரிக்கெட் மட்டும்தான் உண்மையான கிரிக்கெட் என நூறாண்டு காலமாக விளையாடி வந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புயல் போல் வந்து அனைத்து ரசிகர்களையும் இழுத்தது.தற்போது காலம் மாற மாற டி20 கிரிக்கெட் போட்டி ரசிகர்களை தற்போது கவர்ந்து உள்ளது. உலகம் முழுவதும் தங்களுக்கென தனியாக டி20 தொடர்களை நடத்த அனைத்து கிரிக்கெட் நாடுகளும் முயற்சித்து வருகின்றன.

ஐபிஎல் தொடர் பாணியில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,வங்கதேசம், பாகிஸ்தான் என முக்கிய கிரிக்கெட் நாடுகளில் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு ஆபத்து இருப்பதாக பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் ஐசிசிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

Trending


அதன்படி டெஸ்ட் போட்டிகளை இனி 6 அணிகள் மட்டுமே விளையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை 12 அணிகள் விளையாடினால் அது சவாலான விஷயமாக இருக்காது. இந்தியா, ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற பலமான அணிகள் மட்டுமே இனி டெஸ்ட் கிரிக்கெட்டை அவர்களுக்குள் விளையாட வேண்டும்.

அப்படி விளையாடினால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் உயிர் பிழைக்கும் என்று கிரேம் ஸ்மித் கூறியுள்ளார். பெரிய அணிகள் விளையாடும் போது மட்டும் தான் டெஸ்ட் போட்டிகள் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இதனால் வெறும் ஆறு அணிகள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐசிசி அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள கிரிக்கெட் வாரியங்கள் பொருளாதார நெருக்கடி இருப்பதாகவும் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வெறும் ஆறு அணிகளுக்குள் நடைபெற்றால் எதிர்கால கிரிக்கெட் அட்டவணையில் பல்வேறு டி20 தொடர்கள் நடைபெற கால அவகாசம் இருக்கும். இதன் மூலம் ஒவ்வொரு கிரிக்கெட் நாடுகளும் தங்களுக்குள் டி20 லீக் போட்டிகளை நடத்தி பொருளாதாரத்தில் முன்னேற முடியும்.இதற்காகத்தான் ஸ்மித் இப்படி ஒரு ஐடியாவை கொடுத்துள்ளார். 

இந்த ஐடியாவை ஏற்கனவே ரவி சாஸ்திரி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் தற்போது அவரது கருத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பேசியிருக்கிறார். எனினும் பலமான அணிகள் மோதினால் மட்டுமே ரசிகர்களுக்கு பொழுதுப் போக்காக இருக்கும் என்று ஸ்மித் கூறிய கருத்து உண்மை தான் என்பதே விமர்சகர்களின் நிலைப்பாடாகும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement