
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பிசிசிஐ அதிகாரிகள் விராட் கோலியின் ஓய்வு முடிவை ஏற்க மறுத்ததுடன் அவரின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை விராட் கோலி இங்கிலாந்து தொடருக்கு முன் ஓய்வை அறிவித்தால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்ட முடிவை இந்திய பேட்டிங் ஜாம்பவான் விராட் கோலி திரும்பப் பெற வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பதிவில், “டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விராட் தேவை. அவர் நிச்சயம் கொண்டாடப்படுவார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதில்லை.