Advertisement
Advertisement
Advertisement

ரிஷப் பந்தின் விளையாட்டை டக்கெட் பார்த்து இருக்க மாட்டார் - ரோஹித் சர்மா பதிலடி!

இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் செய்தியளர் சந்திப்பு பேசுபொருளாக மாறியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 06, 2024 • 14:29 PM
ரிஷப் பந்தின் விளையாட்டை அநேகமாக டக்கெட் பார்த்து இருக்க மாட்டார் - ரோஹித் சர்மா பதிலடி!
ரிஷப் பந்தின் விளையாட்டை அநேகமாக டக்கெட் பார்த்து இருக்க மாட்டார் - ரோஹித் சர்மா பதிலடி! (Image Source: Google)
Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரில் ஏற்கெனவே நான்கு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெறுள்ளன. இதன்மூலம் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களு தயாராகி வருகின்றன. இதில் இந்திய அணி தொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்புடனும், இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்ள உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவிற்கு பிறகு இங்கிலாந்து வீரர் பென் டக்கெட், இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ச்வால் குறித்து கூறிய கருத்து பெரும் விமர்சனங்களை எழுப்பியது. 

Trending


அப்போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 பவுண்டரி, 12 சிக்சர்கள் என இரட்டை சதமடித்து அசத்தினார். அதுகுறித்து பேசிய டக்கெட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இவ்வாறு விளையாடுவதைப் பார்க்கும்போது, ​​அவர் எங்களுடைய பாஸ்பால் அனுகுமுறையைப் பார்த்து தான் இப்படி அடிரடியாக விளையாடுகிறார் என்று கூறினார். இது இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, பல முன்னாள் வீரர்களின் எதிர்ப்பையும் சந்தித்தது. 

 

இந்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ரோஹித் சர்மா, “ஜெய்ஷ்வால் இங்கிலாந்து அணியிடம் இருந்து கற்றுக்கொள்கிறாரா? எங்கள் அணியில் ரிஷப் பந்த் என்று ஒரு வீரர் இருந்தார். அவரது விளையாட்டை டக்கெட் பார்த்து இருக்க மாட்டார் போல. பாஸ்பால் என்றால் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. நான் யாரிடமிருந்தும் அந்த விளையாட்டை பார்த்ததில்லை. கடந்த முறை இங்கு விளையாடியதை விட இங்கிலாந்து இந்த முறை சிறப்பாக விளையாடியுள்ளது. ஆனால் பாஸ்பால் என்றால் என்ன என்று எனக்கு இன்னும் தெரியவில்லை” என கூறியுள்ளார். 

இதையடுத்து ரோஹித் சர்மாவின் இக்கருத்தானது பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனெனில் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகவும், பிரண்டன் மெக்கல்லம் தலைமைப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டதிலிருந்து அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வெற்றிகளை குவித்தது. இதனை இங்கிலாந்து வீரர்கள் பாஸ்பால் அணுகுமுறை என கொண்டாடிவரும் நிலையில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அப்படி என்றால் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு பதிலடியை கொடுத்துள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement