
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய தொடராக இது அமைந்துள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதன்படி இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைத்ராபாத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்றைய தினம் ஹைத்ராபாத்திற்கு சென்று தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் தனிப்பட்ட காரணங்களினால் விராட் கோலி இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கியது முதலே சவாலான சூழ்நிலைகளிலும் அவர் சதமடித்து சத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.