Advertisement
Advertisement
Advertisement

இந்த தோல்வியை இந்திய வீரர்கள் மறந்து விடக்கூடாது - சுனில் கவாஸ்கர்!

தற்போது ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளதால் இந்திய வீரர்கள் இந்த தோல்வியை மறந்துவிடக்கூடாது என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan March 23, 2023 • 10:39 AM
‘This shouldn’t be forgotten’- Sunil Gavaskar warns India ahead of the 2023 World Cup !
‘This shouldn’t be forgotten’- Sunil Gavaskar warns India ahead of the 2023 World Cup ! (Image Source: Google)
Advertisement

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 269 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடிய இந்திய அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 21 ரன்கள் வித்தியசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

உலக கோப்பை தொடர் நடைபெறும் இந்த ஆண்டில் இந்திய அணி 269 ரன்களை கூட எட்ட முடியாமல் போனது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. குறிப்பாக சூரியகுமார் யாதவும் தொடர்ந்து கோல்டன் டெக் ஆவது ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Trending


இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய கவாஸ்கர், “ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். இதன் மூலம் சிங்கிள்ஸ், பவுண்டரி என ரன்கள் வறண்டு விட்டது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை. பெரிய ஷாட் ஆடி தங்களது விக்கெட்டை இழந்து விட்டார்கள். இந்த மாதிரி சமயத்தில் நீங்கள் விளையாடி பழகவில்லை. முதலில் இந்த தவறை சரி செய்தால்தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

தற்போது ஐபிஎல் தொடர் வேறு தொடங்குகிறது. இதனால் இந்த தோல்வியை இந்திய வீரர்கள் மறந்து விடக்கூடாது. ஏனென்றால் இது போன்ற தோல்விகளை இந்திய வீரர்கள் மறந்து விடுகிறார்கள். அதை நாம் செய்யும் மிகப் பெரிய தவறாகும். ஏனென்றால் உலக கோப்பை வேறு வருகிறது. இதில் நாம் நிச்சயமாக ஆஸ்திரேலியாவை சந்திக்க நேரிடும்.

270 ரன்கள் என்ற இலக்கை நீங்கள் எட்ட முயற்சிக்கும் போது கண்டிப்பாக உங்களுக்கு விளையாட வேண்டும். 90 அல்லது 100 ரன்களுக்கு நீங்கள் பார்ட்னர்சிப் அமைத்து விளையாடி இருந்தால் உங்களால் இலக்கின் அருகில் சென்றிருக்க முடியும். ஆனால் அது நடக்கவில்லை .விராட் கோலியின் கே எல் ராகுலும் பார்ட்டிசிப அமைத்து விளையாடினார்கள்.

ஆனால் அது போதாது அதன் பிறகு ஒரு பாட்னர்ஷிப் நமக்கு கிடைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் ஆஸ்திரேலியா வீரர்கள் சிறப்பாக பந்து வீசி அசத்தினார்கள். ஸ்டம்பை குறிவைத்து அதே லைனில் தொடர்ந்து பந்து வீசினார்கள். மேலும் ஆஸ்திரேலிய வீரர்கள் பில்டிங்கும் மிகவும் சிறப்பாக இருந்தது. இதுதான் இந்த போட்டியில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement