
நேற்று இந்திய அணி பேட்டிங் செய்வதற்கு சாதகமான புனே மைதானத்தில் எல்லா துறைகளிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி, வங்கதேச அணியை மிக எளிமையாக வீழ்த்தி இருக்கிறது. நேற்றைய போட்டியில் வங்கதேச தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். அந்தக் கட்டத்திலிருந்து பார்க்கும் பொழுது வங்கதேச அணி 300 ரன்கள் தாண்டும் என்பதாக இருந்தது.
ஆனால் குல்திப் யாதவ் முதல் விக்கெட்டை கைப்பற்றிய பிறகு, இந்திய அணியின் பௌலிங் யூனிட் அந்த விரிசலை பெரிய ஓட்டையாக மாற்றி, பங்களாதேஷ் அணியை 256 ரன்களுக்கு சுருட்டி விட்டார்கள். இந்த மைதானத்தில் இந்தியா மாதிரியான ஒரு அணியுடன் போட்டியிட வேண்டும் என்றால் இன்னும் நூறு ரன்கள் சேர்த்து எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 48 ரன்கள் எடுத்தார். ஷுப்மன் கில் உலகக் கோப்பை தொடரில் தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் 19 பந்துகளில் ஆட்டம் இழந்தார். இவர்கள் இருவருமே மெஹதி ஹசன் மிராஸ் பந்துவீச்சை தாக்கி ஆட வேண்டும் என்று போய் வெட்கட்டை கொடுத்தார்கள்.